நுவரெலியா தபால் நிலையத்தை பாதுகாக்குமாறு கோரி மகஜர் கையளிப்பு!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
நுவரெலியா தபால் நிலையத்தை வேறு எந்த வியாபார நோக்கத்திற்காகவும் ஒப்படைக்காமல் பாதுகாக்குமாறு கோரி மத தலைவர்கள் குழுவொன்று நுவரெலியா மாவட்ட செயலாளரிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.
தபால் மற்றும் தொலைத்தொடர்பு தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுத்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் மக்களின் கையொப்பங்களுடன் இந்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மகஜரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்குமாறு நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபடவிடம் அந்த குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.