நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தழிழ் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை!
#SriLanka
#School
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் இன்று (13.11) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
பண்டிகை காரணமாக பல தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை கருத்திற்கொண்டு அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆனால், அதற்குப் பதிலாக நவம்பர் 18ஆம் திகதி சனிக்கிழமை சம்பந்தப்பட்ட பள்ளிகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏனைய பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகளுக்கு இந்த தீர்மானம் பொருந்தாது எனவும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.