பாகிஸ்தானின் முன்னாள் உயர்ஸ்தானிகர் படுகொலை முயற்சி - 16 வருடங்களின் பின்னர் விடுதலையான சந்தேக நபர்கள்!

#SriLanka #Murder #Pakistan #prisoner
PriyaRam
2 years ago
பாகிஸ்தானின் முன்னாள் உயர்ஸ்தானிகர் படுகொலை முயற்சி - 16 வருடங்களின் பின்னர் விடுதலையான சந்தேக நபர்கள்!

இலங்கைக்கான பாகிஸ்தானின் முன்னாள் உயர்ஸ்தானிகர் பசீர் அலி மொஹமட் கொலை முயற்சி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் பிரதிவாதிகள் மூவரும் 16 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 14 ஆம் திகதி கொள்ளுப்பிட்டி பகுதியில் வாகனப்பேரணியாக சென்று கொண்டிருந்த பாகிஸ்தான் முன்னாள் உயர் ஸ்தானிகரை கொலை செய்ய முயற்சி செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

images/content-image/2023/11/1699609588.jpg

இந்த வழக்கு தொடர்பாக யோகராஜா நிரோஜன், சுப்பிரமணியம் சுரேந்திரராஜா மற்றும் கனகரெத்தினம் ஆதித்தன் ஆகிய மூன்று பிரதிவாதிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்பதனால் இன்றைய தினம் மூவரையும் விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மகேன் வீரமன் உத்தரவிட்டுள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் இரண்டாம் மூன்றாம் பிரிவுகளின் கீழ் 25 குற்றச்சாட்டுக்கள் அவர்கள் மீது முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!