நாடாளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
மருந்துகள் மற்றும் இரசாயன தட்டுப்பாடு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க இதுவரை சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என சங்கத்தின் பொதுச் செயலாளர் மடிவத்த குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சுகாதாரத்துறையில் நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தற்போதைய அமைச்சர் தலையிட வேண்டும் என அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.