உலகத் தமிழர்களை சந்தித்து வரும் கஜேந்திரகுமார் எம்.பி

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன் பிரித்தானியாவில் உள்ள ஈழத் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளார்.
தாயகத்தில் அண்மைக்காலமாக நிகழும் அரசியல் போக்கு, தமிழர்கள்மீதான அடக்குமுறை தொடர்பில் பிரித்தானியாவில் உள்ள ஈழத்தமிழர்களுடன் உரையாடியுள்ளார்.
இதேவேளை அண்மையில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் பிரித்தானியாவில் மக்கள் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தார்.
அத்தோடு முக்கிய தலைவர்களுடன் பல சந்திப்புகளை நடத்தியதுடன், தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் கன்சர்வேடிவ் உறுப்பினர்களையும் சந்தித்துள்ளார்.
தமிழர்களுக்கான கன்சர்வேடிவ் வரவேற்பு நிகழ்வில் கௌரவ விருந்தினராகப் பங்கேற்று, அங்கிருந்த கன்சர்வேடிவ் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆலோசகர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் முன்னிலையில் கஜேந்திரகுமார் உரையொன்றையும் நிகழ்த்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.





