நாட்டில் இருவேறு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் பலி!

#SriLanka #Accident #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
நாட்டில் இருவேறு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் பலி!

எம்பிலிப்பிட்டிய மொரகெட்டிய பிரதான வீதியில் இலுக்கட்டிய பிரதேசத்தில் இன்று (25.10) காலை சாலையோரம் நடத்துச் சென்ற மூவர் மீது கார் ஒன்று மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளத. 

இதில்  படுகாயமடைந்த நிலையில் ஆண் ஒருவரும் பெண்ணொருவரும் எம்பிலிப்பிட்டிய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர். 58 மற்றும் 71 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய காரின் சாரதியை கண்டுபிடிக்க விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 இதேவேளை, இன்று காலை பமுனுகம, போபிட்டிய பிரதேசத்தில், ஜா கால்வாயில் இருந்து பொப்பிட்டிய நோக்கிச் சென்ற லொறி ஒன்று வீதியைக் கடந்த பாதசாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

27 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். மேற்படி சம்பவங்கள் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!