செக் குடியரசில் இருந்து இலங்கையை வந்தடைந்த விமானத்திற்கு அமோக வரவேற்பு!

லாட் போலிஷ் விமானம் சேவைக்கு சொந்தமான (Lot Polish Airlines) முதலாவது "சார்ட்டர்" விமானம் இன்று புதன்கிழமை (25) காலை செக் குடியரசில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
குறித்த விமானத்தில் 252 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
அடுத்த வருடம் மார்ச் 2 ஆம் திகதி வரை இயக்கப்படும் குறித்த விமான சேவை செக் குடியரசின் செடோக், இலங்கை சுற்றுலா மற்றும் ஜெட்விங் டிராவல்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன Hayley's Aviation நிறுவனம் இலங்கையின் லொட் பொலிஸ் எயார்லைன்ஸ்க்கான பொது சேவைகள் நிர்வாகமாக இயங்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று வருகைதந்த குறித்த விமானத்திற்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அன்பான வரவேற்பு நிகழ்வும் இடம்பெற்றது.
பயணிகள் பாரம்பரிய வரவேற்பு நடன நிகழ்ச்சியுடன் அழைத்துவரப்பட்டதுடன் ஒவ்வொரு சுற்றுலாப் பயணிகளுக்கும் இலங்கை தேநீர் (Ceylon Tea) பொதிகள் பரிசாக வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.



