பயங்கரவாதம் என்ற பெயரில் இலங்கை போன்று காஸாவிலும் இனப்படுகொலை!

#SriLanka #Gajendrakumar Ponnambalam #Israel #War #Gaza
PriyaRam
1 year ago
பயங்கரவாதம் என்ற பெயரில் இலங்கை போன்று காஸாவிலும் இனப்படுகொலை!

இலங்கையில் இருந்து காஸாவில் போர் நிறுத்தத்தைக் கோருவது ஆச்சரியமாக இருக்கின்றது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். 

பயங்கரவாதம் என்ற பெயரில் இனப் படுகொலையே அங்கு நடக்கின்றது. இப்போது காஸாவில் நடப்பதைப் போன்று 15 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் நடந்தது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

யூதர்களுக்கு அவர்களின் நாட்டைக் கொடுக்க வேண்டும். அவர்கள் சமாதானமாக வாழ வேண்டும். அதேபோன்று பலஸ்தீனத்துக்கும் அநீதி ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார். அங்கே விட்டுக்கொடுப்பு ஏற்பட்டிருந்தது. 

ந்த விட்டுக்கொடுப்பை பாலஸ்தீன மக்கள் அதிகமாக செய்ததை மறுக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். யூதர்களின் நாடு அந்த உடன்படிக்கைகளுக்கு இணங்கி நடந்திருக்க வேண்டும். 

வர்களுக்கு சொந்தமான நாடு கிடைக்கும் போது, அந்த நாட்டைச் சரியான முறையில் நடத்தக் கூடிய முறையிலேயே அது அமைய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் பிழையைப் பிழையென்று நேர்மையாகக் கூற வேண்டும். 

images/content-image/2023/10/1698035284.jpg

தற்கும் மேலாக சென்றுவிட்டது. பயங்கரவாதம் என்ற பெயரில் இனப் படுகொலைகளே நடக்கின்றன என சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களின் உணவு, மருத்துவம், நீர் வசதிகள் மறுக்கப்படுவதன் நோக்கம் என்ன எனக் கேள்வியெழுப்பியதோடு, அந்த மக்கள் தொகையை அழிக்கும் செயற்பாடே நடக்கின்றன எனத் தெரிவித்துள்ளார். 

அங்குள்ள மக்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர். மக்களைக் குறிப்பிட்ட இடத்துக்குப் புகலிடம் தேடிச் செல்லுமாறு கூறும் போது அவர்கள் அவ்வாறு செல்லும் போது அவர்கள் நோக்கி தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன எனக் குறிப்பட்டுள்ளார்.

எதிர்கால பாலஸ்தீன நாட்டை அழிப்பதாகவே இது அமைவதாகவும், 15 வருடங்களுக்கு முன்னர் இப்போது காஸாவில் நடப்பதைப் போன்று இலங்கையில் நடந்தது என சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு, கிழக்கில் பாதுகாப்பு வலயங்கள் பிரகடனப்படுத்தப்பட்டதுடன் அவற்றின் மீது குண்டுகள் வீசப்பட்டன எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் எந்தத் தரப்பினரைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நாங்கள் இஸ்ரேல் என்ற அரசுக்கு எதிரானவர்கள் அல்லர் எனவும் தெரிவித்துள்ளார்.

அவர்கள் சமாதானமாக வாழ வேண்டும். அதேபோன்றே இலங்கையிலும் சிங்கள மக்களும் சமாதானமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தல் விடுத்துள்ளார். 

இதனால் இந்த நாடாளுமன்றத்தில் இருப்பவர்கள் மத்திய கிழக்கில் உள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து தமக்கென பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!