அஹுங்கல்ல, உரகஹா வீதியில் துப்பாக்கிச்சூடு : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்!
#SriLanka
#Lanka4
#GunShoot
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

அஹுங்கல்ல, உரகஹா வீதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதில் மூவர் காயமடைந்த நிலையல், பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் 4 மாதக் குழந்தை ஆகியோரே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கர வண்டியொன்றில் பயணித்த இனம் தெரியாத சிலர் இந்த துப்பாக்கிச்சூட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



