யாழ் மீனவர்களின் அவலக் குரல் - அத்துமீறும் இந்திய மீனவர்கள் மற்றும் கள்ளக் கடத்த்கல்காரர்கள்

வடபகுதி முழுக்க குறைந்தது 3,000 இந்திய மீனவர்களின் றோலர்கள் வந்து போகின்றன குறைந்தது 3 நாளைக்கு அவர்கள் இங்கு வந்து போகின்றார்கள். அவர்கள் வரும் போது எங்கள் மீனவர்கள் தொழிலுக்கு போக முடியாது ஏனென்றால் எங்களின் மீனவர்கள் பெரும்பாலும் படுப்பு வலை தான் போடுவார்கள்.
அதை றோலர் வந்து இழுத்து போட்டு போய்விடும். அதனால் அந்த நேரத்தில் இவர்கள் அங்கு செல்வதில்லை. ஒரு வலை போனால் 3 இலட்சம் 4 இலட்சம் நட்டமாகிவிடும். நிறையப் பேருக்கு அப்படி நடந்திருக்கின்றது. அதனால் அவர்கள் கடலுக்கு போவதில்லை.
வாரம் தோறும் 3 நாட்கள் தொழில் இழப்பு. நட்டஈடும் ஒன்றுமில்லை. றோலர் இழுவை மடி வலைகள் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் நடைமுறைப்படுத்தவில்லை. மேற்படி றோலரில் ஒரு கிலோ இறால் பிடிக்கின்றது என்றால் 18 கிலோ மீன் விரயமாகின்றது.
ஒரு றோலர் ஒரு நாளைக்கு 25, 30, 50 கிலோ இறால் பிடிக்கின்றது என்றால் பாருங்கோ 18 ஆல் 50 பெருக்கும் போது எவ்வளவ மீன் விரையம் ஆகின்றது என்று. இதற்கு தீர்வு இன்னும் கண்டு பிடிக்கமுடியாமல் இருக்கின்றது. இதில் நிறைய அரசியல் இருக்கிறது கடற்தொழில் அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தா என்கிற கோமாளி இந்திய மற்றும் தமிழ் மீனவர்களுக்கு இடையே முரண்பாடுகளை ஏற்படுத்தும் வாய்சவாடலுடன் காலம் கடத்தி வருகின்றான்.
இந்திய மற்றும் தமிழ் மீனவர்களுக்கிடையில் நிலவும் பிரச்சனைகளை அரசியல் கலப்பற்ற பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்க யாழ்ப்பாணத்தில் இயங்கும் இந்திய தூதுவராலயத்திற்கும் அக்கறை இல்லை தற்போது இந்திய றோலர்க்ளுக்கு சட்ட ரீதியாக அனுமதி கொடுக்க கூட முயற்ச்சிக்கின்றார்கள் இங்கே நிறையப்பேருக்கு தொழில் இல்லாமல் சரியான கஸ்டம்.எங்களிடம் நிறைய கடல்வளம் இருக்கின்றது என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம்.
ஆனால் கடலில் கால் வைப்பது என்றால் மத்திய அரசிடம் அனுமதி பெற்றுத்தான் நாங்கள் கால் வைக்க வேண்டும். எங்களுடைய கையில் எதுவும் இல்லை. இதனால் எங்களுடைய கரையில் இருக்கின்ற மக்களைவிட தென்பகுதி மக்களுக்கும் அந்நிய இந்திய மீனவர்களும் தான் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற நிலைதான் காணப்படுகின்றது.



