ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர் மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டமை நாட்டின் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதாகும் - அசோக் அபேசிங்க

ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபரை ஜனாதிபதி மீண்டும் பணியில் இணைத்துள்ளமை நாட்டின் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதாகவும், நிறைவேற்று ஜனாதிபதி அலுவலகம் நாட்டின் அரசியலமைப்புக்கு மேலாக செயற்படுவதாகவும் சமகி ஜனபலவேகவின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்,
நாட்டின் பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி, பொலிஸாருக்குப் பொறுப்பான அமைச்சர், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஆகியோர் தற்போது நாட்டிற்கு வெளியே உள்ளனர்.
இவ்வாறான நிலையில் பதில் பொலிஸ் மா அதிபரின் நியமனம் சட்டவிரோதமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கும் மேலாக ஜனாதிபதி பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்கிறார். நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட ஒரு வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும்.
அரசியலமைப்பு சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானங்களை ஜனாதிபதி உதாசீனப்படுத்தியமையினால் மக்கள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.
இப்போது எப்படி தற்போதைய அரசாங்கமும் அமைச்சரவையும் நாட்டை வங்குரோத்து செய்து வங்குரோத்து ஆக்கியது என்பதை அறிய ஆணைக்குழுவை அமைக்கப் போகிறார்கள்.
மேலும், மக்கள் தகவல்களைப் பெறக்கூடிய சமூக ஊடகங்களை ஒடுக்க சமூக ஊடக ஒழுங்குமுறைச் சட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதா அரசுக்கு எதிராக எழுப்பப்படும் குரல்களை ஒடுக்கும் மசோதா. இந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 35 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலோ அல்லது பொதுத் தேர்தலிலோ தற்போதைய அரசாங்கமும் ஜனாதிபதியும் ஆட்சிக்கு வர முடியாது என்பதாலேயே அரசாங்கம் இவ்வாறு செயற்படுகின்றது. தேர்தலை ஒத்திவைக்க அரசு பல்வேறு தந்திரங்களை கையாள்கிறது



