இஸ்ரேலில் உயிரிழந்த அனுலாவின் உடல் இன்று இலங்கை தூதரகத்திற்கு கொண்டு வரப்படவுள்ளது

ஹமாஸ் அமைப்பினரால் இஸ்ரேல் மீதான தாக்குதலில் கொல்லப்பட்ட அனுலா ரத்நாயக்கவின் சடலம் இன்று தம்மிடம் கையளிக்கப்படவுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர், அவளது சடலத்தை அடையாளம் கண்டு, விரைவில் இலங்கைக்கு அனுப்பி வைப்பதாகத் தெரிவித்துள்ளார்.
சடலத்தை அடையாளம் காண குடும்ப உறவினர்கள் பலரையும் தொடர்பு கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்த அனுலா ரத்நாயக்கவுக்கு எதிர்காலத்தில் எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடகப் பேச்சாளர், இஸ்ரேலில் இருந்தும் இலங்கையில் இருந்தும் அவருக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றார்.
யுத்த மோதல்கள் காரணமாக உயிரிழந்த அவர் இஸ்ரேலிய பிரஜைக்கு சமமான சிகிச்சைக்கு தகுதியானவர் என்றும் பிரதி பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான மோதல்கள் இன்னும் முடிவுக்கு வரவில்லை.அதே பகுதியில் இன்னும் போர் சூழ்ந்த சூழல் நிலவி வருகிறது.



