கொழும்பின் பலப் பகுதிகளில் 15 மணித்தியால நீர்வெட்டு!
#SriLanka
#water
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

கொழும்பின் பல பகுதிகளுக்கு சனிக்கிழமை (21.10) 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் மாலை 5.00 மணி முதல் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அம்பத்தலே நீர் வழங்கல் அமைப்பு மேம்பாடு மற்றும் ஆற்றல் சேமிப்பு திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள அத்தியாவசிய பராமரிப்பு பணிகளே நீர் வெட்டுக்கு காரணம் என நீர்வள சபை தெரிவித்துள்ளது.



