புத்தளம் லகூன் பூங்காவில் நபர் ஒருவரின் சடலம் மீட்பு!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
#Puththalam
Dhushanthini K
1 year ago

புத்தளம் லகூன் பூங்காவில் இனந்தெரியாத நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பூங்காவில் இனந்தெரியாத நபரொருவரின் சடலம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (18.10) புத்தளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 55-60 வயதுடையவர் எனவும், அவரது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் சுமார் 05 அடி 03 அங்குல உயரமும், தடித்த, ஒல்லியான உடலும், தலையின் முன்பகுதி வழுக்கையும், வெளிர் நிற சட்டையும், கறுப்பு நிற நீண்ட காற்சட்டையும் அணிந்திருந்ததாகவும், பழுப்பு நிற காலணிகள் அணிந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



