நீதிமன்ற அறையில் இருந்து தப்பிச் சென்று சட்டத்தரணியின் கழுத்தை நெரித்த சந்தேக நபர்

#SriLanka #Court Order
Prathees
1 year ago
நீதிமன்ற அறையில் இருந்து தப்பிச் சென்று சட்டத்தரணியின் கழுத்தை நெரித்த சந்தேக நபர்

 கடந்த 16ஆம் திகதி கலகெதர மாவட்ட நீதிமன்றில் வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தபோதுஇ ​​சந்தேக நபர் ஒருவர் அறையில் இருந்து வெளியே வந்து பெண் சட்டத்தரணி ஒருவரை கழுத்தை நெரித்துள்ளார்.

 கடந்த 16ஆம் திகதி பிற்பகல் கலகெதர பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரால் சட்டத்தரணியின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது.

 குறித்த சந்தேக நபர் 17ஆம் திகதி கஞ்சா வைத்திருந்த மற்றும் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கலகெதர நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

 விசாரணை முடிந்து கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பும் தீர்மானத்தின் பேரில் சந்தேகநபர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

 அந்த காவலில் இருந்து சந்தேக நபர் ஒருவர் மற்றுமொரு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட போது அவர் இரும்புக் கதவைத் தள்ளிவிட்டு சட்டத்தரணி மீது பாய்ந்துள்ளார்.

 சந்தேக நபரின் பிடியில் இருந்து சட்டத்தரணியை விடுவிக்க பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சட்டத்தரணிகளுடன் பாதுகாப்புப் படையினரும் கடுமையாக உழைத்துள்ளனர்.

 காயமடைந்த சட்டத்தரணி கலகெதர வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 பின்னர் சந்தேகநபரிடம் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் வினவப்பட்டதுடன் அன்றைய தினம் சந்தேகநபரை அதே குற்றச்சாட்டின் கீழ் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

 நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் விசாரணையின் போதுஇ ​​சந்தேகநபர் நீதிமன்றத்திற்கு வரும் ஒவ்வொரு நாளும் சட்டத்தரணியைப் பார்த்ததாகவும்இ அவர் மீதான மோகம் காரணமாக அவர் தனது கழுத்தை நெரித்ததாகவும் கூறினார்.

 கலகெதர களுவானே பிரதேசத்தைச் சேர்ந்த லலித் சந்தருவன் என்ற சந்தேக நபர் அப்பகுதியில் உள்ள பல யுவதிகளுக்கு துன்புறுத்தல்களை ஏற்படுத்தி வருவதாகவும், பெண்களை கண்டவுடனேயே கைப்பற்றி விடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளதாக கல்கெதர பொலிஸார் தெரிவித்தனர்.

 சந்தேக நபரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கலகெதர மாவட்ட நீதவான் திரு.ஹர்ஷன ரத்நாயக்க உத்தரவிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!