விடுதிகள் மற்றும் உணவகங்களுக்கான மதுபான அனுமதி பத்திரம் நிறுத்தம்!
#SriLanka
#Hotel
PriyaRam
2 years ago
விடுதிகள் மற்றும் உணவகங்களுக்கு மதுபான அனுமதிப்பத்திரம் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கலால் திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க இன்று புதன்கிழமை இதனை தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
