மாணவர்களிடையே கண்நோய் வேகமாக பரவும் அபாயம் : தீபால் பெரேரா!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
மாணவர்களிடையே கண்நோய் வேகமாக பரவும் அபாயம் : தீபால் பெரேரா!

பாடசாலை மாணவர்களிடையே கண் நோய்கள் வேகமாகப் பரவும் அபாயம் இன்னும் காணப்படுவதாக குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா கூறியுள்ளார். 

நோய்வாய்ப்பட்ட குழந்தைகளை முன்பள்ளி மற்றும் பாடசாலைகளுக்கு அனுப்பாமல் இருப்பதன் மூலம் இந்நிலைமையை கட்டுப்படுத்த முடியும் என அவர் வலியுறுத்தியுள்ளார். 

இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர், “ இன்றைய நாட்களில் பள்ளி மாணவர்களிடையே கண் நோய் பரவி வருகிறது.கண்கள் சிவத்தல், பார்வை மங்கல், கண்ணீர், காய்ச்சல், தலைவலி போன்ற அறிகுறிகளை நாம் காண்கிறோம்.

இது மிக விரைவாக பரவும் என்பதால் இதை வைரஸ் காய்ச்சலாக பார்க்கிறோம்.  குழந்தைகள் ஒன்றாக விளையாடுவதால், அவர்களுக்கு இடையே இத் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இந்த அறிகுறிகளுடன், சில நேரங்களில் மேல் சுவாசக் குழாயில் இருமல், சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளும் வரலாம். அப்படி ஒரு நிலை இருந்தால், குழந்தையை பள்ளிக்கு அனுப்பாதீர்கள். குழந்தைகளை பகல்நேர பராமரிப்பு மையங்களுக்கோ, மொண்டிசரிக்கோ அனுப்பாதீர்கள்” எனத் தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!