நாட்டின் பலப்பகுதிகளில் 100 மி.மீற்றர் மழை பெய்யும்!
#SriLanka
#weather
#Lanka4
#HeavyRain
#sri lanka tamil news
Thamilini
2 years ago
வெப்பமண்டல ஒன்றிணைந்த வலயத்தின் தாக்கம் காரணமாக, நாட்டில் தற்போது காணப்படும் மழை நிலைமை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வளிமண்டல திணைக்களத்தின் அறிக்கையின்படி, பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.
மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீற்றருக்கு மேல் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
இடியுடன் கூடிய மழை,தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.