தனுஷ்கவின் தடையை நீக்குவதற்கு இலங்கை கிரிக்கெட் நடவடிக்கை

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலவுக்கு கடந்த நவம்பர் மாதம் முதல் விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கு இலங்கை கிரிக்கெட் இன்று (17) நடவடிக்கை எடுத்துள்ளது.
எவ்வாறாயினும், தனுஷ்கவின் தடையை இலங்கை கிரிக்கெட் நீக்கியமை சட்டவிரோதமானது என விளையாட்டுத்துறை அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, “உண்மைகளை நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து, சட்டமா அதிபரின் ஆலோசனையுடன் இந்தத் தடை அமுல்படுத்தப்பட்டது.
எனவே அவரது தடையை நீக்க மீண்டும் சட்டமா அதிபருடன் கலந்துரையாட வேண்டும். நீதிமன்றத்தில் உண்மைகளை தெரிவித்த பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது” என்றார்.
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணப் போட்டியின் போது இளம் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்தமை தொடர்பான முறைப்பாடு தொடர்பில் தனுஷ்க குணதிலக்க சிட்னி பொலிஸாரால் நவம்பர் 6, 2022 அன்று கைது செய்யப்பட்டார்.
அத்துடன், 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தனுஷ்க குணதிலவுக்கு சர்வதேச கிரிக்கெட் தடையை விதிக்க இலங்கை கிரிக்கெட் நடவடிக்கை எடுத்திருந்தது.
ஆனால் இந்த ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி வழக்கு அழைக்கப்பட்டபோது, தனுஷ்க குணதிலக் சிட்னியில் உள்ள டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.
அதன்படி தனுஷ்க குணதிலக்கவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று காலை நடவடிக்கை எடுத்தது.
தனுஷ்கவின் கிரிக்கெட் தடையை நீக்கியதன் மூலம் இலங்கை கிரிக்கட் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.



