சுடப்பட்ட சீதா அத்தன்னவின் உடலில் இருந்து இரும்பு உருண்டை மற்றும் ஈயத் துண்டுகள் மீட்பு

#SriLanka #Elephant
Prathees
1 year ago
சுடப்பட்ட சீதா அத்தன்னவின் உடலில் இருந்து இரும்பு உருண்டை மற்றும் ஈயத் துண்டுகள் மீட்பு

மஹியங்கனை ரஜமஹா விகாரையின் ஊர்வலத்தில் ஈடுபட்டிருந்த சீதா அத்தன்னவிற்கு மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது சத்திரசிகிச்சையின் போதுஇ ​​உடலில் இரும்பு உருண்டை மற்றும் பல ஈயத் துண்டுகள் காணப்பட்டதாக பேராதனை பல்கலைக்கழக கால்நடை மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்துள்ளார். 

 ரணவன பிரதேசத்தில் இன்று சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும்இ அதற்கு கிட்டத்தட்ட நான்கு மணித்தியாலங்கள் தேவைப்பட்டதாகவும் தெரிவித்தார்.

 அத்தன்னவின் மார்புப் பகுதிக்கு அருகில் ஒரு இரும்பு உருண்டை மற்றும் சில ஈயத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

 அத்தன்னவின் மார்புப் துவாரத்தில் அல்லது நுரையீரலில் அதிக இரும்புப் பந்துகள் உள்ளதா என்பதில் பெரும் சந்தேகம் நிலவுவதாக பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்துள்ளார்.

 பேராசிரியர் அசோக தங்கொல்ல, சீதா அத்தன்னவுக்கு மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சை தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

 அத்தன்னவின் உடலில் தற்போது காணப்படும் பலவீனமான நிலைமைகள் வெளிப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

 இந்நிலைமையின் பிரகாரம் அத்தன்னவின் உடலில் உள்ள ஏனைய உலோக பாகங்களை அகற்ற அனுமதிக்குமாறு நீதிமன்றில் கோரியதாகவும், நீதிமன்ற அனுமதியின் அடிப்படையில் இன்று சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

 எனினும், இந்த இரும்புப் பந்துகள் அத்தன்னவின் மார்புப் பகுதியில் உள்ளதா என்பதைக் கண்டறியும் வாய்ப்பு தற்போது இல்லை என்பது வருத்தமளிக்கிறது என்று அவர் கூறுகிறார்.

 அதற்குத் தேவையான உபகரணங்களோ, முறையான வழிமுறைகளோ தங்களிடம் இல்லை எனவும், இது மிகவும் மோசமான நிலைமை எனவும் பேராசிரியர் அசோக தங்கொல்ல குறிப்பிட்டுள்ளார்.

 சீதா அத்தன்ன சாதாரணமாக சாப்பிட்டாலும், அவரது உடல்நிலை ஏதோ ஒரு வகையில் பலவீனமடைந்து வருவதை அவதானிக்க முடிகிறது என்றார் பேராசிரியர்.

 இதற்கிடையில், சீதா அத்தன்னவின் உடல்நிலை மோசமடைந்து வருவதால், இதற்கு வனவிலங்கு பாதுகாப்புத் துறைதான் பொறுப்பேற்க வேண்டும் என்று சீதா அத்தன்னவின் உரிமையாளர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!