நாட்டில் இருப்பவர்கள் வெளி நாட்டில் இருந்து போலி தமிழ் பற்று பேசுகின்றவர்களிடம் அவதானமாக இருங்கள்!!!

ஈழம் என்ற போர்வையில் சில வெளிநாட்டு அமைப்புக்கள், கோவில்கள், முன்னாள் அமைப்புக்களில் இருந்து மக்களின் பணத்தை சூறையாடியவர்கள் இரகசியமாக மறைவில் நின்றுகொண்டு தத்தம் வாரிசுகளை தமது சுயநலத்துக்கும், தமது அமைப்புக்குள் இருக்கும் போட்டி பொறாமைக்கும் பலிக்கடாயாக்குவதோடு, இது சேவை எனக் கூறி பல வர்த்தகர்கள், பொதுமக்களிடம் பணத்தையும் வசூலிக்கிறார்கள்.
இதன் தொடர்பை வைத்து தமது வியாபாரத்தையும் மேம்படுத்த முனைகின்றார்கள். இதைவிட இவ்வமைப்பு ஒன்றல்ல. இவ்வமைப்புக்கள் பல நாடுகளில் பலரின் பின்னனியில் பல தலைமைகளினால் இயக்கப்படுகின்றார்கள்.
அதை விட நாட்டில் வாழும் அப்பாவி படித்தவர்களையும் மாணவர்களினதும் மூளைச் சலவை செய்து அவர்களின் வருங்காலத்தை குட்டிச்சுவராக்குகின்றனர்.
மக்களே, மாணவர்களே, படித்தவரே நீங்கள் சிந்திக்க தெரியாதவர்கள் அல்ல. வெளி நாட்டில் படித்தவர்கள் மட்டும் உயர்ந்தவர்கள் அல்ல. உங்களாலும் எல்லாம் முடியும். எதை எப்படி எப்பொழுது செய்யவேண்டும் என்பதை இடம், பொருள், ஏவல் பார்த்து நீங்கள் செயற்ப்படுங்கள்.
முக்கியமாக வெளி நாடுகளில் இருந்தும் இந்தியாவில் இருந்தும் ஈழத்தினை பற்றியோ பிரிவினைவாதம் பற்றியோ இலங்கை அரசாங்கத்தை பற்றியோ விமர்சனம் கூறுகின்ற ஊடக உரிமையாளர்கள் இலங்கைக்கு வரும்பொழுது ஆளும் அரசோடு அனுசரித்து, அல்லது பின் கதவால் உறவை வைத்துக்கொண்டே வருகிறார்கள். இதை நீங்கள் புரிந்து செயலாற்றுக.
Lanka4.com



