இஸ்ரேலில் கைது செய்யப்பட்ட இலங்கை பெண்கள் அடையாளப்படுத்தப்பட்டனர்!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
ஜோர்தானில் இருந்து இஸ்ரேலுக்கு சட்டவிரோதமான முறையில் எல்லையை கடந்த போது கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கை பெண்களின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
50 வயதான ஜே.ஏ. சமிலா துஷாரி மற்றும் 44 வயதான கே. . ஸ்ரீயானி மஞ்சுளா குலதுங்க ஆகிய பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜோர்தான் எல்லை வழியாக சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் நுழைந்த இரண்டு பெண்களும் ஜோர்டானுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், இந்தப் பெண்களின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால வேலைகள் மேற்கொள்ளப்படும் என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.