இரத்தினபுரியில் 18 பிரதேச செயலகப் பிரிவுகளில் 16 பிரிவுகளுக்கு மண்சரிவு அபாயம்

இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள 18 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 16 பிரதேசங்களுக்கு தேசிய கட்டிட மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்புகள் நேற்று 14ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என இரத்தினபுரி அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி, அலபத்த, குருவிட்ட, அஹெலியகொட மற்றும் கலவான ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இரண்டு கட்ட மண்சரிவுகளின் கீழ் எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு அபாயகரமானது என பிரதேச செயலகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிவித்திகல, ஓபநாயக்க, வெலிகேபொல, பலாங்கொட, இம்புல்பே, அயகம, கஹவத்தை, பெல்மதுல்ல, கிரியெல்ல, கொடகவெல மற்றும் கொலொன்ன ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மஞ்சள் அறிவிப்பு அல்லது மண்சரிவு அபாய வலயங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பிரதேச செயலகங்களில் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கும் கிராம அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.



