நினைவேந்தல் நாளில் முன்னெடுக்கப்படவுள்ள இசை நிகழ்ச்சி : சந்தோஷ் நாராயணனுக்கு அனுப்பப்பட்ட கடிதம்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
நினைவேந்தல் நாளில் முன்னெடுக்கப்படவுள்ள இசை நிகழ்ச்சி : சந்தோஷ் நாராயணனுக்கு அனுப்பப்பட்ட கடிதம்!

யாழில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21,22 ஆம் திகதிகளில் தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுடைய இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது.  

குறித்த கடிதத்தில், “ஒடுக்கப்பட்ட மக்களின் குரலினை வெளிக்கொணரும் தங்களின் இசையமைப்பில் உருவான பாடல்களையும், இசையையும், ஈழத் தமிழ் மக்களாகிய நாங்களும் கேட்டு இரசித்து மகிழ்ந்திருக்கிறோம். அந்தவகையில் உங்களுக்கு எராளமான இரசிகர்கள் எம்மத்தியில் இருக்கிறார்கள்.  

பாரிய இனவழிப்பினை தமிழினம் சந்தித்ததனை நீங்கள் அறிவீர்கள். இவ்வினவழிப்பில் கொல்லப்பட்ட மக்களின் நினைவேந்தல் செய்வதன் முக்கியத்துவத்தையும் நீங்கள் உணர்வீர்கள். இந்நிலையில் தங்களால் யாழ்ப்பாணத்தில் இசைநிகழ்ச்சி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள ஒக்டோபர் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் 1987 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றிக்கொண்டிருந்த வைத்தியர்கள், தாதியர்கள், உட்பட நோயாளர்கள், பொதுமக்கள் இந்திய அமைதிப்படையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர் என்பதனை நீங்கள் அறிந்திருக்கக்கூடும்.

images/content-image/1697369539.jpg

அநியாயமான முறையில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவித் தமிழ் உறவுகளை வருடா வருடம் நினைவுகூறப்பட்டு வருகிறது. இந்த துயர்மிகுந்த நாட்களில் நினைவேந்தல்கள10டாக அடுத்த சந்ததியினருக்கு தமிழின போராட்டத்தின் நியாயங்கள் சென்றடையும் என நாம் நம்புகிறோம். இதனை மடைமாற்றி இந்நாட்களை இளைஞர்களுக்கான மகிழ்ச்சிகரமான களியாட்ட நாட்களாக மாற்றியமைக்க முயலும் இலங்கை இந்திய அரசுகள் தங்களை பலிக்கடாவாக்க முயல்கிறார்கள்.  

இந்நினைவேந்தல் நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மேற்படி இசை நிகழ்ச்சிகளில் தாங்கள் தெரிந்தோ, தெரியாமலோ கலந்துகொள்வதானது, அநியாயமாக படுகொலை செய்யப்பட்ட அப்பாவித் தமிழ் உறவுகளை அவமதிக்கும் செயற்பாடு என்பதுடன், பேரினவாதத்தால் இன்றும் நடைபெற்று வரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புக்கு துணைநிற்கும் செயற்பாடாகவும் அமைந்துவிடும். 

images/content-image/1697369601.jpg

மேற்படி நினைவேந்தல்களுடாக தமிழினம் அடுத்த சந்தத்திக்கு கடத்த முயலும் தமிழின விடுதலை வேட்கைக்கும் எதிரான செயற்பாடாக அமையும். தாங்கள் தமிழ் நாட்டில் இருந்து வருகைத்தந்திருப்பவர் என்னும் வகையில் இந்திய படையினரால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளின் நினைவு தினங்களில் தங்களின் இசை நிகழ்ச்சி நடைபெற ஒழுங்கு செய்யப்பட்டிருப்பது, இன்றும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் மக்களால் தவறாகவே பார்க்கப்படும் என்பதனை அன்புரிமையுடன் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.  

இறந்தவர்களை நினைவேந்தும் உரிமையை சர்வதேச சட்டங்களும் இலங்கைச் சட்டங்களும் அனுமதித்துள்ளபோதிலும், படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் நினைவேந்தல்களுக்கு சட்டவிரோதமாக தடைகளை ஏற்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் தரப்புக்கள் நினைவேந்தல்களுக்கு சட்டரீதியாக தடைகளை ஏற்படுத்த முடியாதபோது இந்நாட்களை தெரிவு செய்து களியாட்ட தினங்களாக மாற்றும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

images/content-image/1697369645.jpg

இத்தகைய முயற்சிகளை உலகத் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் இரசிகத்தளத்தைக் கொண்டிருக்கும் தாங்கள் தமிழ் மக்களின் வலிகளையும், வேதனைகளையும் உணர்ந்துக்கொண்டு இழப்புகளுக்கும், தியாகங்களுக்கும் மதிப்பளித்து குறித்த திகதிகளை மாற்றி பொருத்தமான வேறொரு திகதியில் தங்கள் நிகழ்வை மாற்றியமைக்குமாறு வேண்டிக்கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

குறித்த கோரிக்கை கடிதத்தில் தமிழத் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம், பாராளுமன்ற உறுப்பிரான செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் கையொப்பம் இட்டுள்ளனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!