கிளிநொச்சியில் ரயிலில் மோதி 17 கால்நடைகள் உயிரிழப்பு!
#SriLanka
#Kilinochchi
#Lanka4
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆனையிரவு,பகுதியில் நேற்று (13.10) யாழ்ப்பாணம் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிவேக கடுகதியில் மோதிண்டு 11 பசு மாடுகளும் 6 நாம்பன் மாடுகளுமாக மொத்தம் 17 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
கால்நடை உரிமையாளரின் அசமந்த போக்கு காரணமாகவே 17 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



