வறட்சியால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு அடுத்த மாதம் இழப்பீடு
#SriLanka
#Mahinda Amaraweera
Prathees
2 years ago
வறட்சியினால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு அடுத்த மாதம் இழப்பீடு வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு காலதாமதமின்றி உரம் உரிய நேரத்தில் வழங்கப்படும் என விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேபோல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் கடந்த திங்கட்கிழமை முதல் உரவிநியோகம் இடம்பெற்றுவருகின்றது.
எந்த இட்திலும் உரப் பற்றாக்குறை ஏற்டாதவாறு உர மானியம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
வவுனியா பெரியகட்டு கிராமத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.