தரமற்ற Antibiotic தடுப்பூசிகளை கொண்டு வந்த அதிகாரிகளை கைது செய்ய உத்தரவு
#SriLanka
#Court Order
#Medicine
Prathees
1 year ago

தரமற்ற Antibiotic தடுப்பூசிகளை இறக்குமதி செய்து போலி ஆவணங்களை தயாரித்து அரச வைத்தியசாலைகளுக்கு விநியோகித்தவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த நபர்களை எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதிக்கு முன்னர் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மாளிகாகந்த நீதவான் திருமதி லோச்சனா அபேவிக்ரம குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு மேலும் உத்தரவிட்டுள்ளார்.
லஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான பிரஜை சக்தி அமைப்பு மற்றும் சிவில் அமைப்புக்களின் கூட்டமைப்பினரால் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பான உண்மைகளை தெரிவித்த போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.



