பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்து இன்று வெளியாகியுள்ள தகவல்!
#SriLanka
#Court Order
#Court
Mayoorikka
1 year ago

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என சட்டமா அதிபர் இன்று உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
குறித்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத் மற்றும் டொக்டர் ஹரிணி அமரசூரிய ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இந்த அறிவித்தலை வழங்கினார்.



