மட்டக்களப்பு தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக அலி சாஹிர் மௌலானா செய்யாத் நியமனம்!
#SriLanka
#Parliament
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் (SLMC) அலி சாஹிர் மௌலானா செய்யாத், மட்டக்களப்பு தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக, அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் அஹமட் ஜைனுலாப்தீன் நசீரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்த பதவிக்கு மௌலானா நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று (10.11) வெளியிடப்பட்டுள்ளது.
அஹமட் ஜைனுலாப்தீன் நசீரின் பதவி விலகல் காரணமாக ஒன்பதாவது பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.