உணவு விஷமானதில் பண்டாரவளையில் பல பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் வைத்தியசாலையில்
#SriLanka
#Student
#Hospital
#Poison
Prathees
1 year ago

பண்டாரவளை பகுதியில் உள்ள பல பாடசாலைகளின் மாணவர்கள் உணவு விஷம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 30 பாடசாலை மாணவர்கள் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவர்களில் 09 பேர் சிகிச்சை பெற்று ஏற்கனவே வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.
சிகிச்சை பெற்று வரும் ஏனைய மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.



