யாழில் வாள்வெட்டுத் தாக்குதல் - பொலிஸார் தீவிர விசாரணை!
#SriLanka
#Jaffna
#Police
#Nallur
PriyaRam
1 year ago

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நல்லூர் - அரசடி பகுதியில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த தாக்குதலில் கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றிரவு வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், காயமடைந்தவர் சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.



