நீதித்துறை மீது கை வைக்காதே! கொழும்பு உயர்நீதிமன்ற முன்றலை முற்றுகையிட்ட சட்டத்தரணிகள்
#SriLanka
#M. A. Sumanthiran
#Colombo
#Protest
#CourtOrder
Mayoorikka
2 years ago
முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்து நாட்டை விட்டு வெளியேறிச் சென்றமைக்கு நீதி கோரி கொழும்பில் சட்டத்தரணிகள் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொழும்பு உயர்நீதிமன்றத்திற்கு முன்னால் ஆர்ப்பட்ட பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்திற்கு முன்னால், பெருமளவான சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
''நீதித்துறை மீது கை வைக்காதே'' என்னும் தொனிப்பொருளில் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
குறித்த போராட்டத்தில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான கே.வி.தவராசா மற்றும் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சுகாஷ் உள்ளிட்ட பெருமளவான சட்டத்தரணிகள் இணைந்து இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.




இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே