40 ஆயிரம் ரூபா மற்றும் போலி நகைகளுக்காக 2 பெண்களை கொலை செய்த நகராட்சி தொழிலாளி!
மாத்தறை பிரதேசத்தில் வீடொன்றில் இரு பெண்களை படுகொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் மாத்தறை பொலிசார் சந்தேகத்தின் பேரில் மாநகர சபை ஊழியர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
தனது சம்பளம் வாழ்வதற்குப் போதாத நிலையில், வேலைக்கு மேலதிகமாக வேறு கூலி வேலைகளையும் செய்து பணம் சம்பாதிப்பதற்காக இந்த வீட்டுக்குச் சென்றதாகவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். சந்தேக நபர் ஒரு வீட்டின் சுவரைத் தாண்டி குதித்து வீட்டினுள் பார்த்தபோது, அங்கிருந்த இரண்டு வயதான பெண்கள் சந்தேக நபரிடம் “ஏன் பார்க்கிறீர்கள்” எனக் கேட்டுள்ளனர்.
வேலை தேடி வந்ததாக அவர் கூறியதையடுத்து, இறந்த பெண்கள் சந்தேக நபரை வீட்டின் முற்றத்திற்கு வர அனுமதித்தனர். வீட்டுக்காரரின் அறிவித்தலையடுத்து, சந்தேக நபர் வீட்டின் வாய்க்கால்களை சுத்தம் செய்து, வேலைகளை முடித்துவிட்டு, வீட்டிற்குள் பதுங்கிச் செல்ல முயன்றபோது பெண் ஒருவர் அலறியுள்ளார். அவள் அலறலை நிறுத்த, சந்தேக நபர் அருகில் இருந்த மாம்மர கிளையை எடுத்து குறித்த பெண்ணை அடித்துள்ளார்.
மற்றைய பெண் அலறிக் கொண்டிருந்த போது, சந்தேக நபர் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். பின்னர் வீட்டில் இருந்த நான்கு பத்து ரூபாய் (ரூ. 10) நோட்டுகள் (ரூ. 40) மற்றும் போலி நகைகளை மர்மநபர் திருடிவிட்டு வீட்டை விட்டு தப்பியோடிவிட்டார்.
40 ரூபா மற்றும் போலி நகைகள் காரணமாக இரண்டு உயிர்கள் பலியாகியுள்ளதாக கூறிய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.