பல முக்கிய நாடுகளின் பங்கேற்புடன் விமானப்படையினரின் மாநாடு கொழும்பில்!
#SriLanka
#Sri Lanka President
#Colombo
#Airport
#Air Force
Mayoorikka
1 year ago

இலங்கை விமானப்படையால் 6வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட கொழும்பு விமான கருத்தரங்கில் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, இந்தியா, சீனா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த கல்வியாளர்களை பங்குகொள்கின்றார்கள்.
விமானப்படையின் இரத்மலானை படைப்பிரிவின் இன்று (09) மற்றும் நாளை (10) லேக்சைட் மாநாட்டு மண்டபத்தில் பலரது பங்கேற்புடன் நடைபெறவுள்ளது.
விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில், ஜனாதிபதியின் தலைமை அதிகாரி, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தலைமையில் இந்த அறிஞர் மாநாடு ஆரம்பிக்கப்படவுள்ளது.



