வெளிநாட்டில் இருந்து கொலைத்திட்டம்: இராணுவச் சிப்பாய் கைது

எல்பிட்டிய, பஜல மற்றும் சம்தி மாவத்தை பகுதியில் வைத்து கொலை செய்யத் தயாராக இருந்த இரண்டு சந்தேகநபர்கள் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எல்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் அந்த இடத்திற்கு வந்ததாகவும், அவர்களிடம் இருந்து 10 ரவைகள், 03 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 02 போலி இலக்கத் தகடுகள் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நவகம, மெட்டியகொட பிரதேசத்தில் வசிக்கும் 22 மற்றும் 31 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களில் ஒருவர் தற்போது இராணுவத்தில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் எனவும் மற்றைய சந்தேக நபர் இராணுவ சேவையில் இருந்து வெளியேறிய இராணுவ சிப்பாய் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் இருவரும் ஒருவரை கொலை செய்ய தயாராகி, குறித்த இடத்திற்கு வந்து அந்த நபரின் வீட்டிற்கு அருகில் தங்கியிருப்பதாக எல்பிட்டிய தலைமையக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி உடனடியாக செயற்பட்ட எல்பிட்டிய தலைமையக பொலிஸ் பரிசோதகர் சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.
கைது செய்யப்பட்ட இராணுவ வீரர்கள் விடுமுறையில் சென்றிருந்த வேளையில் இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது போன்ற கொலையை வேறொரு இடத்தில் செய்ய இருவரும் திட்டமிட்டு அது தோல்வியடைந்தது தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், சந்தேகநபர்கள் இருவரும் எல்பிட்டிய, பஜல சமேமி மாவத்தை பகுதியில் தங்கியிருந்து வெளிநாட்டில் இருந்து கொலையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.



