அரங்கல காப்புக்காடு பகுதியில் தீ பரவிய சம்பவம் : 05 பேர் கைது!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

அரங்கல பாறைக்கு பின்னால் உள்ள காப்புக்காடு பகுதியில் தீ பரவிய சம்பவம் தொடர்பில் 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 17 மற்றும் 18 வயதுடைய 05 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாக்கப்பட்ட பகுதியின் புதர் பகுதி தீயினால் நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் கையடக்கத் தொலைபேசிகளில் இருந்து எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மற்றும் கூடாரங்களைத் தயாரிக்கப் பயன்படுத்திய கருவிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவுல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



