சீனாவிடம் இருந்து கடன் வாங்கியிருக்கலாம் - அஜித் நிவார்ட் கப்ரால்!

2022ஆம் ஆண்டு சீனாவிடம் இருந்து 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெற இருந்த நிலையில், நாட்டை திவாலானதாகவும், கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நாடு எனப் பிரகடனப்படுத்துவதும், கடனை மீள செலுத்துவதில் தவறிழைப்பதும் சதி முயற்சிக்கு ஒப்பானது என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
நாட்டின் நிதி திவால்தன்மைக்கான காரணங்கள் குறித்து ஆராயும் பாராளுமன்ற விசேட குழு முன்னிலையில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், "ஐஎம்எஃப் இல்லாமல் வேறு திட்டம் இல்லை என்று பலர் நினைத்தார்கள். அந்த நேரத்தில் எங்களுக்கு கிடைத்த மொத்த வெளிநாட்டு வருமானம் 4,950 மில்லியன் டொலர்கள். இப்போது 4 ஆண்டுகளில் 2900 மில்லியன் டொலர்களை ஐ.எம்.எஃப் இடம் இருந்து பெற எதிர்பார்க்கிறோம்.
ஆகவே கடன்கள் மற்றும் பிற விஷயங்களைச் மீள செலுத்துங்கள். மத்திய வங்கியின் மில்லியன் 50 பேர் எஞ்சியவர்கள் என்ற கதை தவறானது” எனக் கூறினார்.



