இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
#SriLanka
#weather
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் (08.10) மழையுடனான வானிலையே நீட்டிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், குருநாகல் மாவடத்திலும், மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழைப் பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக முன்னுரைக்கப்பட்டுள்ளது.
சில இடங்களில் 75 மி.மீற்றருக்கு மேல் மழைவீழ்ச்சி பதிவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை, தற்காலிக காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



