இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் சர்வதேசம் தலையிட முடியாது - ஜனாதிபதி ஊடகப்பிரிவு!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் சர்வதேசம் தலையிட முடியாது - ஜனாதிபதி ஊடகப்பிரிவு!

இலங்கையின் உள்நாட்டு விவகாரங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற யோசனையை இலங்கை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது. 

இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் தற்போதுள்ள அனைத்து சட்டங்களும் சர்வதேச விசாரணைகளை நடத்துவதற்கு இடமளிக்கவில்லை, அத்தகைய விசாரணைகளை மேற்கொள்வது சட்டத்தை மீறுவதாகும் என்று பிரதமர் மேலும் விளக்கினார்.  

உள்ளூர் கத்தோலிக்க நாளிதழான 'ஞானார்த்த பிரதீபயா'வில் "சர்வதேச விசாரணை" என்ற தலைப்பில் வெளியான தலையங்கம் குறித்து PMD வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த அறிக்கையில்,  ஒரு சுயாதீனமான, வெளிப்படையான மற்றும் முழுமையான விசாரணை மற்றும் கண்காணிப்புக்கு குழு தேவை."  என்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ், ஏப்ரல் 20, 2023 அன்று, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் 88 தொகுதிகள் மற்றும் 48,909 பக்கங்கள் கொண்ட அறிக்கையை வணக்கத்திற்குரிய அருட்தந்தை ஹரோல்ட் அந்தோனியிடம் வழங்கியதாக PMD கூறுகிறது. 

மேலும், கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர்,  அமைச்சர் டிரன் அலஸ்ஸுடன் அண்மையில் தொலைபேசியில் உரையாடியபோது, பிஷப் ஹரோல்ட் அந்தோனி இந்த அறிக்கையை தனிப்பட்ட முறையில் மீளாய்வு செய்வதாக குறிப்பிட்டிருந்தார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!