கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது தீப்பரவல்!
#SriLanka
#Colombo
#Accident
#fire
PriyaRam
1 year ago

ஒருகொடவத்த பகுதியிலுள்ள களஞ்சியசாலை ஒன்றில் ஏற்பட்டிருந்த தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
கருவாப்பயிர் சார்ந்த உற்பத்தி பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த பகுதி ஒன்றிலேயே தீப்பரவல் ஏற்பட்டிருந்ததது.
தீப்பரலை கட்டுப்படுத்துவதற்காக 8 தீயணைப்பு வாகனங்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
சுமார் 4 மணித்தியாலங்களுக்கு பின்னர் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணமாக இதுவரையில் வெளியாகாத நிலையில் குறித்த களஞ்சியசாலை முழுமையாக தீக்கிரையாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



