நில்வளா ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள மக்களுக்கு ஓர் அறிவிப்பு

நில்வளா உட்பட பல ஆற்றுப்படுகைகளில் வெள்ள நிலைமை தொடர்வதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவில், நீர்ப்பாசனப் பணிப்பாளர் பொறியியலாளர் எஸ்.பி.சி.சுகீஸ்வர கூறுகையில்,
நில்வளா ஆற்றில் இன்னும் பெரிய வெள்ளம் உருவாகும் அபாயம் உள்ளது.
இதன் காரணமாக மாத்தறை, திஹாகொட, கம்புருபிட்டிய, அக்குரஸ்ஸ, மாலிம்பட, அத்துரலிய ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட தாழ் நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் இது தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாத்தறை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 14,104 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாத்தறை அனர்த்த முகாமைத்துவக் குழு இன்று காலை கூடி தற்போதைய சூழ்நிலையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடியது.
இதற்கிடையில், கிங் ஆற்றை சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் ஆற்று நீரின் நிலைமை மேலும் சற்று உருவாகலாம் என நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் எஸ்.பி.சி.சுகிஸ்வரா தெரிவித்தார்.
மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.



