மூன்று பிள்ளைகளின் தாய் படுகொலை: தலை மற்றும் கைகால்களை பிரித்து பாலத்திற்கு அருகில் உள்ள கால்வாயில் வீசிய சந்தேக நபர்கள்

#SriLanka #Murder #Investigation
Prathees
1 year ago
மூன்று பிள்ளைகளின் தாய் படுகொலை: தலை மற்றும் கைகால்களை பிரித்து பாலத்திற்கு அருகில் உள்ள கால்வாயில் வீசிய சந்தேக நபர்கள்

பெண்ணொருவரை படுகொலை செய்து அவளது தலை மற்றும் கைகால்களை அவளது உடலில் இருந்து பிரித்து சதுப்பு நிலத்தில் அவரது உடலை வீசிய சம்பவம் தொடர்பாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் இருவரும் எதிர்வரும் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 அங்கொட, வைத்தியசாலை வீதி பகுதியில் வசித்து வந்த 52 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான தமவிட்ட குருகே பிரதீபா சில்வா என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டார். 

 சந்தேக நபர்கள் பொலிஸாரிடம் சரணடைந்ததன் பின்னர்இ தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பின்னர் நேற்று முன்தினம் (05) பிற்பகல் மஹர இலக்கம் 02 நீதிமன்ற நீதவான் ஜனிதா பெரேரா முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

 அவர்களை வரும் 13ம் திகதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

 இக்கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான சியாம்பலாபே - தெற்கு மஹேன வீதியில் வசிக்கும் வர்த்தகரான பி. ஜி. சுதீர (53) மற்றும் சமுர்த்தி மாவத்தை - தெற்கில் வசிக்கும் அவரது சகாவான ஆர். ரோஹித குமார் (48) ஆகிய இருவருமே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 இந்த இரண்டு சந்தேக நபர்களும் கடந்த 2 ஆம் திகதி பிற்பகல் சபுகஸ்கந்த பொலிஸ் நிலையத்தில் சபுகஸ்கந்த பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து, மஹர நீதவான் நீதிமன்றில் பெற்றுக் கொள்ளப்பட்ட தடுப்புக் காவலில் வைத்து 48 மணிநேரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளின் போது, ​​இந்த சந்தேக நபர்களிடமிருந்து கொலை நடந்த விதம் தொடர்பான பல முக்கிய தகவல்களைக் கண்டறிய முடிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

 இருவரும் ஒன்று கூடி குறித்த பெண்ணை கொலை செய்த தலை மற்றும் கைகால்களை பிரித்து பாலத்திற்கு அருகில் உள்ள கால்வாயில் வீசியுள்ளதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளர்.

 சடலம் தற்போது ராகம பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைக்கான திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!