ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அறிக்கையை கத்தோலிக்க ஆயர்கள் ஒன்றியம் ஆய்வு செய்ய வேண்டும்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்ந்த பின்னர் கத்தோலிக்க ஆயர் சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தயாராகவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
88 தொகுதிகள் மற்றும் 48,909 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையின் அனைத்து ஆவணங்களும் ஏப்ரல் 20ம் திகதி பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் அவர்களினால் கத்தோலிக்க ஆயர்கள் சங்கத்தின் தலைவர் ஆயர் ஹரோல்ட் அந்தோனியிடம் கையளித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சர், ஆயர் ஹரோல்ட் அந்தோனியுடன் நேற்று (05) தொலைபேசியில் கலந்துரையாடியதுடன்இ குறித்த அறிக்கையை தானும் ஆராய்ந்து வருவதாக ஆயர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, அறிக்கையை ஆராய்ந்த பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆயர்கள் சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்கு தயாராகி வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் உள்விவகாரங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை நடத்துவதற்கு உடன்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும், சர்வதேச விசாரணைகளை நடத்துவதற்கு அரசியலமைப்பிலும் ஏனைய சட்டங்களிலும் இடமில்லை எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன்இ சனல் 4 தொலைக்காட்சி நிகழ்ச்சி தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை வெளியிடுவதற்கு ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.



