நிபா வைரஸ் பயம் : நாட்டில் பன்றி இறைச்சி நுகர்வு குறைந்துள்ளது

இந்தியா உட்பட பல நாடுகளில் பரவி வரும் "நிபா" வைரஸ் காரணமாக, இந்நாட்டில் பன்றி இறைச்சி நுகர்வு குறைந்துள்ளது, அதனால் பன்றி இறைச்சி தொழில் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.
விவசாய அமைச்சின் கால்நடை அபிவிருத்திப் பிரிவின் அதிகாரிகள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் இதனைத் தெரிவித்துள்ளனர்.
நிபா வைரஸ் அபாயம் குறித்து கருத்து தெரிவித்த கால்நடை திணைக்கள அதிகாரிகள், இலங்கைக்குள் வைரஸ் பரவும் அபாயம் இல்லை எனவும், எனவே பன்றி இறைச்சியை உட்கொள்வது தொடர்பில் அச்சப்பட தேவையில்லை எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
நிபா வைரஸ் என்பது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய ஒரு ஜூனோடிக் நோயாகும். பாதிக்கப்பட்ட பன்றிகள், அவற்றின் திசுக்கள், உடல் திரவங்கள் மற்றும் மலம் ஆகியவற்றுடன் பாதுகாப்பற்ற தொடர்பு மூலம் வைரஸ் மனிதர்களுக்கு பரவுகிறது.
எவ்வாறாயினும், இந்த நோய் இலங்கையில் இருந்து இதுவரை பதிவாகாததாலும், சுகாதார திணைக்களம் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடுமையாக நடைமுறைப்படுத்துவதாலும், நிபா வைரஸ் நம் நாட்டிற்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.
மேலும், நாட்டில் உள்ள அனைத்து பன்றி பண்ணைகளையும் கண்காணிக்கும் திட்டத்தை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் ஆரம்பித்துள்ளது.
எனவே, இந்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பன்றி இறைச்சியை உட்கொள்வதில் தேவையற்ற அச்சம் தேவையில்லை எனவும், பன்றி இறைச்சியை உட்கொள்வதில் பிரச்சினை இல்லை எனவும் கால்நடை துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.



