அசானிக்கு வீடு கிடைக்குமா? கிடைக்காதா? கிடைத்த சந்தர்ப்பத்தை தட்டி தவற வைத்தவர் யார்?

இலங்கையின் மலையகப்பகுதியில், இருந்து ஒரு சின்னக் குயில் இந்தியாவின் சங்கீத கடலில் நீச்சலடித்து வெற்றிபெற பறந்து சென்று பல கோடி உலக தமிழர்களின் பாராட்டையும் பெற்று இன்னும் “சரிகமபா” போட்டி நிகழ்ச்சியில் பாடிக்கொண்டிருக்கிறார்.
மத்தியஸ்தர்களையே ஆனந்தக் கடலில் மூழ்கி எடுத்த சின்னஞ் சிறு சிறுமியின் அபார திறமையை #lanka4 ஊடகம் சிறப்பாக கவனித்து வருகிறது.
கண்ட கோணங்களில் மிகைப் படுத்தி செய்திகளை பிரசுரிக்காத எமது வரம்புக்குள் நின்று நாமும் அவரை உள சுத்தமாக அக்கறையோடு வாழ்த்துவதோடு அவரது எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு சில செய்திகளை ஆதாரத்தோடு பிரசுரித்தோம்.
திரிவுபடுத்தியும், திரி வைத்து மூட்டியும் சில ஊடகங்கள் பிரசுரித்ததை நாம் எமது ஊடக குழுமத்தூடாக அவதானித்தோம்.
அது ஒரு புறம் இருக்க அசானி லையன் குடியிருப்பிற்குள் தனது வாழ்க்கையை ஆரம்பித்த நிலையில், ஊராரின் உதவியுடன் ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு சென்றது அவருக்கோ அவர் குடும்பத்துக்கோ மட்டுமல்ல தமிழ் மக்களுக்கும் இலங்கைக்கும் பெரிமை சேப்பதாகவே # lanka4 ஊடகம் கருதுகிறது.
போட்டிக்கு சென்றதும் அனைவரும் அறிந்த கதையாகும். அது ஒரு புறம் இருக்க அசானியின் நிலையை பலரிடம் விசாரித்து அறிந்த பின்னர் நாடு முழுவதும் கதவைத் தட்டி உதவும் கொடைக்கோன் TCT வணிக வளாக உரிமையாளரும் தியாகி அறக்கொடை உரிமையாளருமான வாமதேவா தியாகேந்திரன் எனப்படும் தியாகி ஐயா அவர்கள் அசானிக்கு ஒரு வீடு கட்டிக் கொடுக்க முன்வந்து அதனை எமது #lanka4 ஊடகத்துக்கு பிரத்தியேகமாக கூறினார்.
அச்செய்தியை எமது #lanka4 ஊடகம் அவரின் அனுமதியோடு லங்கா4.கொம் இணையத்தில் பிரசுரித்த பின்னர் அதனை மற்றய ஊடகங்கள் அச்செய்திக்கு காது, மூக்கு, வாய் எல்லாம் வைத்து பலவாறாக பிரசுரித்தன.
இது சாதாரணமாக அனைத்து ஊடகங்களும் செய்யும் ஒரு செயற்பாடு என்பதும் அறிந்த விடயமே. இவை ஒரு புறம் இருக்க இதை அறிந்த மலையக அமைச்சர் ஒருவர் தம்முடைய வரட்டு கௌரவத்தைக் காக்க தானும் தனது அவுஸ்திரேலியாவில் இருக்கும் உறவினரும், கனடாவில் இருக்கும் உறவினரும் இணைந்து அசானிக்கு வீடு கட்டி கொடுக்கப்போவதாக இலங்கையில் இருந்து இயங்கும் ஒரு பிரபல தொலைக்காசியில் ஒளிபரப்பாகும்படி ஒரு பொது நிகழ்வில் பகிரங்கமாக கூறினார்.
அதன் பின்னர் அச்செய்தியையும் பல ஊடகங்கள் ஒளிபரப்பின. இதை அறிந்து தியாகேந்திரன் அவர்கள் தனது முடிவை மாற்றாது அசானிக்கு வீட்டை கட்டிக்கொடுக்க முன்வந்த மலையக அமைச்சருக்கு வீடு தான் வீடு கட்டி கொடுக்க எடுத்த முடிவை மாற்றி அதற்கு செலவு செய்ய இருந்த பணத்தை இந்தியாவில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கூவிக்கொண்டு இருக்கும் வறிய சின்னஞ் சிறிய குயில்களுக்கு தன் கையாலேயே பகிர்ந்து வழங்க விரைவில் தமிழ் நாடு செல்ல ஆயத்தமாகுகின்றார் என்பதை எமது lanka4 ஊடகத்துக்கு பிரத்தியேகமாக கூறியுள்ளார்.
எப்படியோ இவ்வுதவியை செய்ய முன்வந்த தியாகி ஐயாவுக்கு எமது வாழ்த்துக்கள் கோடி உரித்தாகட்டும். அத்தோடு அசானிக்கு அமைச்சர் உறவினர்களோடு இண ந் து கட்டிக் கொடுபோவதாக கூறப்பட்டது வெறும் மேடைப் பேச்சு மட்டும்தானோ என்ற ஐயமும் இருப்பதாக எமது மலையக செய்தியாளர் கூறுகிறார்.
அசானிக்கு கிடைக்க இருந்த வீடு கிடைத்தால் முதலில் மகிழ்வது தியாகி ஐயா அவர்களும் எமது #lanka4 ஊடகமுமே.
இச்செய்தியை காரணம் கருதியே இப்பொழுது பிரசுரிக்கிறோம். அக்காரணம் தொடர்பாக ஒரு செய்தி எமது #lanka4 ஊடகத்தில் வெளிவரும்.



