ரயில்வே அதிகாரிகளுக்கிடையிலான தாக்குதல் குறித்து விசாரணை நடத்த குழு!

#SriLanka #Attack #Train
Mayoorikka
1 year ago
ரயில்வே அதிகாரிகளுக்கிடையிலான தாக்குதல் குறித்து விசாரணை நடத்த குழு!

ரயில்வே துணைக் கட்டுப்பாட்டாளர் ஒருவருக்கும், ரயில்வே பாதுகாப்புப் படை சார்ஜென்ட் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து விசாரணை நடத்த, மூத்த ரயில்வே அதிகாரிகள் மூவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

 இந்தக் குழுவின் தலைவராக ரயில்வே பொது முகாமையாளர் டபிள்யூ.ஏ.டி.எஸ் குணசிங்கவினால் பிரதி பிரதம பொறியியலாளர் (சக்தி) எச்.எச். டி.எஸ்.எல்.ஜெயதிலக்க கடமையாற்றுகிறார்.

 இந்த மூவர் குழுவின் மற்ற உறுப்பினர்கள் துணை போக்குவரத்து ஆணையர் எம்.ஐ. ஜயதிலக மற்றும் பிரதி பாதுகாப்பு படை அத்தியட்சகர் ஜே.எம்.என்.எஸ். ஜயசேன நியமிக்கப்பட்டுள்ளார்.

 தெமட்டகொட புகையிரத பிரதான பொறியியலாளர் ஓடுபாதைக்கு அருகில் நேற்று இடம்பெற்ற புகையிரத அதிகாரிகளுக்கிடையிலான மோதல் சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு ரயில்வே பொது முகாமையாளர் குணசிங்க குழுவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

 இதேவேளை, புகையிரத பிரதி கட்டுப்பாட்டாளருக்கும், புகையிரத பாதுகாப்பு படையின் சார்ஜென்ட்டுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலுக்காக புகையிரத பாதுகாப்பு படையின் சார்ஜன்ட் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!