இலங்கையில் மீண்டும் அதிகரிக்கப்படும் பொருட்களின் விலைகள்: மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை
#SriLanka
#prices
#Central Bank
#Governor
#Tamilnews
Mayoorikka
1 year ago

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை குறித்த ஆய்வு இம்மாதத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ள மத்திய வங்கியின் ஆளுநர், கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளும் அதற்கு சமாந்திரமாக இடம்பெறும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா, பாரிஸ்கிளப் மற்றும் சீனா ஆகிய நாடுகள் பெரும் ஆதரவை வழங்கியுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சில விடயங்களிற்கு தீர்வு எட்டப்பட்டதும் பணியாளர் மட்ட உடன்பாடு சாத்தியமாகலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சு சில வரிகளை அதிகரிக்கலாம் என்பதால் சில பொருட்களின் விலைகளும் அதிகரிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்



