மின் விசிறியால் பறிப்போன சிறுவனின் உயிர்!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
புஸ்ஸல்லாவ இந்து தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் 14 வயது சிறுவன் நேற்று வகுப்பறையில் மின்விசிறியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
பாடசாலையில் இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவர் வேறு சில குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த வேளையில் நாற்காலியை மிதித்துவிட்டு மேசையில் ஏறிய போது மின்விசிறியில் அடிபட்டு காயமடைந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த மாணவர் புபுரஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்தவர். அவரது சடலம் கம்பளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
புஸ்ஸல்லாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்