முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவிற்கு விசேட உத்தரவை பிறப்பித்த நீதிமன்றம்!
#SriLanka
#Gotabaya Rajapaksa
#Lanka4
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 'அரகலய' இயக்கத்தின் போது நாடளாவிய ரீதியில் அவசரகாலச் சட்டங்களை அமுல்படுத்துவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு தொடர்பில் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.
இதன்படி, குறித்த ஆட்சேபனைகள் இருப்பின் இன்று (05.10) முதல் எட்டு வார காலத்திற்குள் அவற்றை தாக்கல் செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.



