2022 இல் 148,000 பசுக்கள் கொல்லப்பட்டன: பால் உற்பத்தி 6 மில்லியன் லீற்றர் குறைந்துள்ளது

இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக தரவுகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கடந்த ஆண்டில் (2022) 148,000 பசுக்கள் வெட்டப்பட்டுள்ளன.
இந்த புள்ளிவிவரங்களின்படி, 2021 ஆம் ஆண்டை விட கடந்த ஆண்டில் 4000 பசுக்கள் வதை குறைந்துள்ளது.
2021 இல் இலங்கையில் 152,000 பசுக்கள் கொல்லப்பட்டன. 2022 ஆம் ஆண்டளவில் இலங்கையில் பசுக்களின் எண்ணிக்கை 1,128,000 ஆகவும் பால் உற்பத்தி 419 மில்லியன் லீற்றராகவும் இருந்தது.
பசுவின் பால் உற்பத்தியும் 2021ஐ விட 2022ல் ஆறு மில்லியன் லீற்ற குறைந்துள்ளது.
மேலும், கடந்த ஆண்டில் 43,000 செம்மறி ஆடுகள் கொல்லப்பட்டுள்ளதுடன், 18,000 பன்றிகள் கொல்லப்பட்டுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புள்ளிவிவரங்களின்படி, 2021 ஆம் ஆண்டை விட 2022 ஆம் ஆண்டில் பன்றிகள் வெட்டப்படுவது பாதியாக குறைந்துள்ளது.
2021 ஆம் ஆண்டில், 33000 பன்றிகள் வெட்டப்பட்டன.



